உசிலம்பட்டி அருகே பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

உசிலம்பட்டி அருகே பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-21 07:15 GMT

கருமாத்தூரில், வட்டார சுகாதார திருவிழா நிகழ்வின் ஒருபகுதியாக, வருமுன் காப்போம் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், கருமாத்தூர் புனித கிளாரட் துவக்கப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் மற்றும் சுகாதாரத்திருவிழா நடைபெற்றது.

டாக்டர்.செந்தில்குமார் துணை இயக்குனர் மேற்பார்வையிலும் மரு.பாண்டியராஜன் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலும், பாண்டீஸ்வரி இளங்கோவன், கருமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது.

முத்துராமன் தொடக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட கவுன்சிலர் மாவட்டக்குழு துணைத்தலைவர், நல கல்வியாளர் முத்துவேல், இராசதுரைபாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார். பி.முத்துமாயன், அருள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News