விக்கிரமங்கலம் அருகே தார்ச்சாலைபணிகள் முடிக்கப்படாததால் மக்கள் அவதி

சுமார் நான்கு மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது பணிகளை முடிப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை;

Update: 2021-10-02 04:57 GMT

உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் கிராமத்தில் பாதியில் நிற்கும் தார்சாலையால்  பொதுமக்கள்  சிரமப்படும் நிலை நீடிக்கிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் கருப்பு கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு, மதுரை தேனி திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்று வருகின்றனர். இக்கோயிலுக்கு, நடுமுதலைக்குளம் பஸ் நிலையத்திலிருந்து மெயின் ரோடு கண்மாய் கரையில் உள்ளது.

கடந்த ஆண்டு இந்த ரோடு சேதமடைந்ததால், புதிதாக சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் சுமார் 30 லட்சம் செலவில் ரோடு புதிதாக போடுவதற்கு டெண்டர் விடப்பட்டது. இதற்கான பூர்வாங்க வேலை நடந்துள்ளது. முழுமையாக ரோடு போடுவதற்கு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது பணிகளை முடிப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் தென்படவில்லை.  ஏற்கெனவே, இருந்த ரோட்டை கலைத்துப்  போட்டுவிட்டதால்,  கோயிலுக்கு வந்து செல்லும்  பக்தர்கள்  பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, ஒன்றியக் கவுன்சிலர் அரவிந்தன் கூறியதாவது:  இப்பகுதிக்கு மட்டுமல்ல, பல்வேறு மாவட்டத்திற்கும் துடியான தெய்வம் கருப்பு கோயில். இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரக்கூடிய மெயின் ரோடு, இப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக் கூடிய ரோடும் சேதமடைந்திருந்தது. எங்கள் பகுதி கிராம மக்களுடைய கோரிக்கையை ஏற்று, புதிதாக ரோடு போடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். சுமார் நான்கு மாதகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதேபோல்,  கொக்குளம் வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ஆட்டோ டிரைவர் ரமேஷ் நடக்க முடியாத இச்சாலையில் ஆட்டோவிலும் பயணிக்க முடியவில்லை என்றார். குடும்பத்தலைவி மாலதி  சாலைபோடப்படாததால் சரியான நேரத்தில் கோவிலுக்கு வந்து எங்களது நேர்த்திக்கடனை செலுத்த முடியாத அவல நிலையில் உள்ளதாக  கூறினார்.

Tags:    

Similar News