உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பணி ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2021-11-14 16:42 GMT

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்கு கல்லூரி செயலாளர் வாலந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முதல்வர் ரவி விழாவின் நோக்கம் குறித்து பேசினார். கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜ்யகொடி, முருகானந்தம், வைரவன் பாலசுந்தரம், சின்னபாண்டியன், சுப்பையா, சுப்புராஜ், தேடாமணி, நவநீதன் மற்றும் பலர் கலந்து கொண்டு கல்லூரியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர்.

கல்லூரியின் சார்பாக பொருளாளர் வனராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனைவரையும் கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் ஜோதி ராஜன். ராமன் பேராசியர்கள் தவமணி, பொன்ராம், உடற் கல்வி இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர். கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மொக்கைச்சாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News