மதுரை அருகே 195 கிலோ கஞ்சா பறிமுதல், இருவர் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வோர் பதுக்குவோர், கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்;
மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதை பொருள் மூட்டைகள்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் வெளியிட்ட தகவல்: மதுரை மாவட்டத்தில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆனந்தத்தாண்டவம் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ரோந்து பணி மேற்கொள்ளும் போது, சோதனை ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த காளை(65) , பெருமாயி(60) இருவரை கைது செய்து செய்தனர்.
மேலும் , இது சம்பந்தமாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா 195 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.