மதுரை அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன திருட்டு
மதுரை அருகே அலங்காநல்லூரில், இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
அலங்காநல்லூரில், இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில், பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து திசைதிருப்பி பணத்தை திருடி செல்லும் வாலிபர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதை, பாட்ஷா என்பவர் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் உதிரிபாகங்கள் வாங்குவது போல கடை உரிமையாளரான பாட்ஷாவிடம் பேச்சு கொடுத்து, அவரை திசைதிருப்பினார்,
கடை உரிமையாளர் பாட்ஷா வெளியே சென்று மீண்டும் கடைக்கு திரும்புவதற்குள், அந்த வாலிபர் கடைக்குள் புகுந்து கல்லாபெட்டியிலிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி, உள்ளாடைக்குள் மறைத்து வைத்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல், அங்கிருந்து வாலிபார் சென்றுவிட்டார். இக்காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகின. அதன் அடிப்படையில், திருடிய வாலிபரை அலங்காநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.