அலங்காநல்லூர் அருகே நியாய விலை கடையை திறந்து வைத்த தங்க தமிழ் செல்வன் எம் பி

அலங்காநல்லூர் அருகே நியாய விலை கடையை தங்க தமிழ் செல்வன் எம் பிதிறந்து வைத்தார்.

Update: 2024-10-09 09:15 GMT

அலங்காநல்லூர்  அருகே, ரேஷன் கடையை திறந்து வைத்த தங்க தமிழ் செல்வன் எம்பி.

அலங்காநல்லூர் அருகே ரேஷன் கடையை தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வாவிடை மருதூர் கிராமத்தில்புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட இணை பதிவாளர் குருமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஊராட்சிமன்றத் தலைவர் திருநாவுக்கரசு, 15.பி.மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயளாலர் துரை சிங்கம், வாவிடை மருதூர் கார்த்திக், ஒன்றியப் பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் தனுஷ்கோடி, பிரதாப், சந்தனகருப்பு, தவசதீஸ்,ராகுல், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News