மதுரை மாவட்டத்தில் நாளை மதுபானக்கடைகள், பார்களுக்கு விடுமுறை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் நாளை மதுபானக்கடைகள், பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-13 11:15 GMT

மதுரை மாவட்டத்தில் 14.04.2022-அன்று மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள்,  தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மேற்கண்ட நாளில் மூடப்பட்டு இருக்கும். மேற்படி நாளில், மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி, தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News