மதுரை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

மதுரை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-03-20 12:02 GMT

மதுரை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை ஆணையூர் அருகே பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைக்க சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில், தொண்டர்கள் படைசூழ, தாரை தப்பட்டையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, இங்கிருந்து கார் மூலம் ஆணையூர் புறப்பட்டார்.

Tags:    

Similar News