திருமங்கலம் அருகே மழைநீரில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்பு

மதுரை அருகே கண்மாய் உடைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Update: 2021-12-04 12:15 GMT

மழை நீரில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில்,   கண்மாய் உடைந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த, 5 நபர்களான குமரவேல் வயது 78 , மனைவி பாப்பா வயது 72 , மகள் மேரி வயது 32 , மகள் அஸ்விதா வயது 6 , மாமனார் அபேஸ் வயது 52 ஆகியோரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று மீட்டு, திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News