சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா

சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில், நடந்த பிரதோஷ விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

Update: 2022-04-15 04:10 GMT

சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் பிரதோஷ விழா நடைப்பெற்றது. 

சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில், நடந்த பிரதோஷ விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில், பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள், ரவி,பரசுராம், ஐயப்பன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை, தக்கார் இளமதி,எம்.வி.எம். குழுமத் தலைவர் மணி முத்தையா, தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் மற்றும் பணியாளர் பூபதிஉட்பட பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News