மதுரையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொங்கல் விழா

மதுரையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-13 06:00 GMT

மதுரையில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர். 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று, போகி பண்டிகை, வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழாவானது இன்று,  மாநகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தல்லாகுளம் ஐந்தாம் பகுதி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,  மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கரும்பு கொண்டு வந்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News