காதல் மனைவி பிரிந்து சென்றதால் பெண்காவல் கணவர் தற்கொலை - போலீஸ் விசாரணை

திருமங்கலம் அருகே மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை

Update: 2021-05-23 06:00 GMT

காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளம் பகுதியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவர் விருதுநகரில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பின்னர் கணவரைபிரிந்து பெண்போலீஸ் பெற்றோருடன் அவரது வீட்டுக்கு  சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் பூச்சிமருந்தை சாப்பிட்டு  மயங்கியநிலையில் இருந்து்ள்ளார்.அ்க்கம் பக்கத்தினர் பார்த்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனில்லாமல் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News