சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் வாழ்வியல் திறன் கருத்தரங்கம்

சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் வாழ்வியல் திறன் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-09-11 09:45 GMT

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் வாழ்வியல் திறன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி அகத்தர உறுதி மையம் சார்பில் , ஆசிரியர் செறிவூட்டத் திட்டத்தின் கீழ் 'மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு' என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலாளர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சதீஷ் பாபு வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.

பெருநிறுவனங்களின் மனிதவளப் பயிற்றுநர் (NLP Tools நிறுவனம்,விருதுநகர்) கே.ஆல்ஃபா சின்னராஜா சிறப்புரை ஆற்றினார்.   வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் வீ.முருகன் நன்றி கூறினார். தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சௌந்தரராஜு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  துணைமுதல்வர் முனைவர் கோ.கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.ஜெயசங்கர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் நிகழ்வில், கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News