திருமங்கலம் அருகே பழமையான ஆலயத்தில் குடமுழுக்கு
திருமங்கலம் அருகே வடகரை புதூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தையா அய்யனார் கோவிலில் குடமுழுக்கு நடந்தது;
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, வடகரை புதூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தையா அய்யனார் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
இத் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் , வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ,யாகசாலை அமைக்கப்பட்டு, வேத விற்பனர்களால் தீப , தூப ஆராதனைகளுடன் கலச நீர் எடுத்துவரப்பட்டு பூஜித்த பின்பு , கோபுர கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதனை த் தொடர்ந்து , கோவிலின் உட்புறத்தைச் சுற்றி பரிகார சுவாமிகள் அமைக்கப்பட்டு அவைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தகும்பாபிஷேக விழாவில், திருமங்கலம், கள்ளிக்குடி , டி. கல்லுப்பட்டி , அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.