சோழவந்தான் அருகே வயல் வெளிகளில் ஆபத்தான மின்சார கம்பிகள்; விவசாயிகள் புகார்

சோழவந்தான் அருகே வயல் வெளிகளில் ஆபத்தான மின்சார கம்பிகள் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-05-30 10:14 GMT

சோழவந்தான் அருகே வயல்வெளிகளில் ஆபத்தான நிலையில் மின்சார கம்பிகள்.

சோழவந்தான் அருகே, ஆபத்தான நிலையில் வயல் வெளிகளில் உள்ள மின் கம்பிகளை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் ரோட்டில், மேற்குப் பகுதியில் சோழவந்தான் முதலியார் கோட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் வயது 75. உள்பட விவசாயிகள் பலர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் நிலத்தில் குறுக்கே ஆபத்தான நிலையில் , மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால், தனது நிலத்தில் வாழை உள்பட விவசாயம் பயிரிட முடியாமல் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும், தாழ்வாக தொங்கக் கூடிய கம்பிகளை சரி செய்ய முன்வரவில்லை.

இதனால், விவசாயம் செய்யும் பொழுது தாழ்வாக மின்கம்பிகள் விவசாயிகள் மீது மின்சாரம் பாய்ந்து உயிர் பலி ஏற்படக் கூடிய அபாய கட்ட நிலையில் உள்ளது.

கடந்த வாரம் முள்ளி பள்ளத்தில் காலைக்கடனை கழிக்க சென்ற ஆலடி என்ற விவசாயி தென்னந்தோப்பில் குறுக்கே சென்ற மின் கம்பி தாழ்வாக இருந்ததால், தென்னை மரத்தில் உரசி ஆலடி தடுமாறி தென்னை மரத்தில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல், அப்பகுதி உள்ள விவசாயிகளை உயிர்ப்பலி வாங்கும் முன் மின் வாரியம் துரித நடவடிக்கை எடுத்து, தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரி செய்யும்படி அப்பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News