மதுரை அருகே கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் வருமுன் காப்போம் முகாம்

மதுரை அருகே கோபிநாயக்கன்பட்டி பள்ளியில் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-11 00:15 GMT

கோபிநாயக்கன்பட்டி பள்ளியில், வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் டி.கல்லுப்பட்டி வட்டார அரசு உயர்நிலைப் பள்ளி, கோபிநாயக்கன்பட்டி பள்ளியில், வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது.  எம். செங்குளம் ஊராட்சியில்,  ஊராட்சி மன்றத் தலைவர்கள் அழகர்சாமி, ஞானசேகர், தேவி, தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் முரளிராஜ், மருத்துவ அலுவலர் பண்டிசெல்வி, முத்துதுரை கண்ணன் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் பெரியசாமி முகாம் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.

Tags:    

Similar News