பைக் திருட்டு: மூன்று சிறுவர்கள் கைது.!

மதுரை கோவலன்நகரில் பைக்திருடிய சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-05 01:54 GMT

அலங்காநல்லூர் கேட்டுக்கடையை சேர்ந்தவர் அய்யாக்கன்னு மகன் கார்த்திக்25. இவர் கோவலன் நகரில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக கார்த்திக் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று சிறுவர்கள் திருடியது தெரியவந்தது. அந்தமூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News