அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி

காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18) மருத்துவமனையில் உயிரிழந்தார்

Update: 2022-01-14 11:00 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உயிரிழந்த சிறுவன் பாலமுருகன்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் பெற்ற காளைகள் கலந்து கொண்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18). படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News