வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது

Update: 2022-07-16 09:39 GMT

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி அம்பேத்கரை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பாண்டியராஜன் வயது 22 . இவர் ,கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள்,  பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி ரூபாய் 1500 பறித்துச் சென்றனர் .

இது குறித்து, அவனியாபுரம் போலீசில் புகார் செய்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கீரைத்துறையை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 24), சக்திவேல் (வயது 23). செந்தூர் ராஜ் (வயது 21. ஆகியோர் பாண்டிய ராஜனிடம் ,வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்து ,அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News