மதுரை மாநகராட்சி சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்: 68 பேர் மனு அளிப்பு
மதுரை மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது;
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் முன்னிலையில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக 14 மனுக்களும், புதிய சொத்து வரி மற்றும் சொத்துவரி தொடர்பாக 20 மனுக்களும், காலிமனை வரி வேண்டி 5 மனுக்களும், பாதாளச்சாக்கடை அடைப்பு சரிசெய்தல் வேண்டி10 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 1 மனுவும், குடிநீர் வசதி வேண்டி 5 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 2 மனுக்களும், சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 6 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும் என மொத்தம் 68 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. மேலும் இம்முகாமில், குடிநீர் வரியில் பெயர் திருத்தம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடி அனுமதி ஆணையினை மனுதாரருக்கு, மேயர் வழங்கினார்.
இம்முகாமில், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.