விஜயகாந்த் மறைவு: நாடக நடிகர் சங்கம் அஞ்சலி

Nadaga Nadigar Sangam Tribute To Vijaykanth புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் , கொடை வள்ளல் என பல அடைமொழிகளைக் கொண்ட மறைந்த நடிகரும்தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு நாடக நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2023-12-29 07:12 GMT

மதுரையில் நாடக நடிகர் சங்கம் சார்பில், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Nadaga Nadigar Sangam Tribute To Vijaykanth

தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நடிப்பாலும், அவர் செய்த உதவிகளாலும் மக்களால் இன்றளவில் போற்றப்படுகிறார். அவரைப் பார்க்க சென்னை செல்வோருக்கு உணவளிக்காமல்  திரும்ப விடமாட்டார். அதேபோல்தான் தற்போது மறைந்த  தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தைப் பற்றி ஒவ்வொருவரும் சொல்வது இவர் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கின்றனர். அந்த வகையில்  மனிதநேயத்தோடு மற்றவர்களுக்கு  தெரியாமல் உதவி செய்யக்கூடியவர் இவர். 

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்"அஞ்சலி" தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் களாவாசலில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் விருமன் கவிஞர் கருமாத்தூர் மணிமாறன், காசி மாயன், விஜய் டிவி கதாநாயகி சோ அட்சயா, செம்மீன் திரைப்படம் நடிகர் வெட்டுக்குமார், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சங்க மேலாளர் பாலா, வீரா, அப்பா பாலாஜி,பறவைமணி, பழனிவேல் கருங்காலக்குடி சந்துரு, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.நடிகரும் தேமுதிக தலைவரும் ஆன விஜயகாந்த் மறைவிற்கு ராஜபாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்து கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பஞ்சு மார்க்கெகட் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலை மன்றம் வழியாக அம்மா உணவகம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.அதன் பின், அம்மா உணவகம் முன்பு அவரது திரு உருவ படத்திற்க்கு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்..

Tags:    

Similar News