மதுரையில் நள்ளிரவில் போலீஸார் பைக்கில் தீ வைத்த மரம் நபர்கள்

Madurai News Tamil -மதுரையில் நள்ளிரவில் போலீஸார் பைக்கில் தீ வைத்த மரம் நபர்கள்

Update: 2022-06-23 08:45 GMT

திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் தீவைக்கப்பட்ட  மோட்டார் பைக்

Madurai News Tamil -திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் பைக்கிற்கு  தீவைத்த மர்ம நபர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா , ராஜீவ் காந்தி நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் ராஜ்குமார் ( 29). இவர் , மதுரை மாநகர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வாசலில் திடீரென வெளிச்சமாக தெரிந்ததையடுத்து. வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ,வாசலில் இருந்த பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பைக்கை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.காவல் துறையில் பணிபுரியும் காவலர் பைக்கை தீ வைத்து எரித்தது குறித்து இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News