முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன்

Update: 2021-11-05 04:34 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரை முருகன் வருகை

சென்னையிலிருந்து, விமானம் மூலம், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் மதுரை வந்தார்.

அமைச்சர் துரைமுருகனுக்கு, திமுக கட்சி சார்பில், திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி, கோ. தளபதி எம்.எல்.ஏ., அமைச்சர் ஜ. பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். பிறகு அவர், முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக, புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, அமைச்சர் துரை முருகனை, மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நீர்பாசனத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

Tags:    

Similar News