மதுரை அருகே இளைஞர் கொலை..

மதுரையில் இளைஞர் கொலை..

Update: 2021-06-15 07:17 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர் 3-வது குறுக்கு தெரு அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கி இறந்ததாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் முத்துக்குமார் ( வயது 35 )என்று தெரிய வந்தது. இவர் கீரைத்துறை பகுதியில் , பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணை தெரிந்து இது குறித்து , அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News