Madurai District Crime News மதுரை மாவட்ட கிரைம் செய்திகள் போலீஸார் விசாரணை

Madurai District Crime News மதுரை மாவட்டத்தில் நடந்த வழிப்பறிஉள்ளிட்ட கிரைம் செய்திகள் ...படிச்சு பாருங்க...

Update: 2023-11-01 13:31 GMT

பைல் படம்

Madurai District Crime News

அரிவாள்  முனையில் 1150 வழிப்பறி:2 பேர் கைது 

வைகை தென்கரையில் ஒர்க்ஷாப் மெக்கானிக்கரை கத்திமுனையில் மிரட்டி ரூ 1150 வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெத்தானியாபுரம் ஆசைத்தம்பி தெருவைச்சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (53).. இவர் புட்டுத்தோப்புவில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, வைகை தென்கரையில் சென்று கொண்டிருந்தார். அவரை பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை அவர் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 1150 ஐ பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து, ராமகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .விசாரணைக்கு பின் அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆரப்பாளையம் கண்மாய்கரை ஏகே கோபாலன் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வினித்( 21,) ஆரப்பாளையம் கண்மாய்கரை கணேசன் மகன் விக்னேஷ் (19 )ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வண்டியூரில்  ஆயுதங்களுடன் வாலிபர் கைது:

மதுரை அண்ணா நகர் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், வண்டியூர் சங்கு நகர் பகுதியில் சென்றபோது சந்தேகப்படும்படியாக போலீசைக் கண்டதும் பதுங்கிய வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தனர். அவர் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் யாகப்பா நகர் பாலாஜி நகர் வேல்முருகன் மகன் தினேஷ் குமார்( 28). என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் அரிவாளுடன் பதுங்கிஇருந்தார் என போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.

மதுரை கே. புதூர் மங்கள குடியை சேர்ந்தவர் ஆசாத் மனைவி நிர்மலா தேவி (35.) இவருடைய கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .

இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த நிர்மலாதேவி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய தாய் கொடுத்த புகாரில் கே புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை தென்கரையில்   4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது:

மதுரை , கரிமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தண்டீஸ்வரன். இவர் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் புட்டுத்தோப்பு வைகை தென்கரைப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் போலீசை கண்டதும் ஓடிச்சென்று பதுங்கினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர் .அவர்களில் ஒருவர் பிடிபட்டார் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரிடம் சோதனை செய்தபோது அவரிடம் நான்கு கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் யார் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாக்கியலட்சுமி நகர் மூன்றாவது தெரு முல்லை தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ஜெயபால்( 24). என்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர் .தப்பி ஓடிய நபர் அவர் யார் என்று விசாரித்த போது மேல பொன்னகரம் மூன்றாவது தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரவீன் குமார் என்றும் அவரிடமும் நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரைதேடி வருகின்றனர்.

Tags:    

Similar News