மதுரை: செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதுரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-16 10:49 GMT

மதுரை அலங்காநல்லூர் காந்திகிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரதாப் (வயது 32.). இவர் மதுரை நகரில் செயின் பறிப்பு வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இவரை ,போலீசார் கண்காணித்து வந்த நிலையில், இவர் பொது பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து நடந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து  பிரதாப்பை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News