தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு திமுக சார்பில் இலவச தொழிற் பயிற்சி முகாம்

தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இலவச உணவு, தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுகவினருக்கு மக்கள் பாராட்டு

Update: 2021-09-20 05:19 GMT

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கொரோனாதடுப்பூசி முகாமில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு திமுக சார்பில் இலவச தொழிற் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குள்பட்ட வலையங்குளம் பகுதியில் திமுக சார்பில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடும்  வகையில், சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எம்.எஸ்.எம்.இ. என்கிற அமைப்பின் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் சிறப்பு தொழிற் பயிற்சி முகாம் நடைபெற்றது. காலையில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் இந்த சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, இலவச உணவு மற்றும் தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. அமைப்பினரின் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி முகாமில், 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Tags:    

Similar News