மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிதி அமைச்சர்
மொத்தம் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வழங்கினார்.;
மதுரையில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை மாவட்டம், மத்திய தொகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில், உள்ள எம்.ஆர்.பி. மஹாலில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், மொத்தம் 586 பயனாளிகளுக்கு ரூ.93,14,596/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.