திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்க எண்ணும் பணி
மதுரை திருப்பரங்குன்றம் முருகன்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது;
பைல் படம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கையில் ரூபாய்.28 லட்சத்து31 ஆயிரத்து,442: தொகை காணிக்கையாக கிடைத்துள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது . திருக்கோவிலில் உள்ள உண்டியல்களில் , பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய் 28 லட்சத்து,31 ஆயிரத்து,442 ரூபாய பணமும், தங்கம் 170 கிராம், வெள்ளி 1950 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் துணை ஆணையர் கலைவாணன் தெரிவித்தார்.திருக்கோயில் பணியாளர்கள், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.