மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்: மேயர் பங்கேற்பு
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் தெரிவித்தார்;
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ம மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ம மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 53 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் மற்றும் ஆணையாளர், நேரடியாக பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு, மேயர் உத்தரவிட்டார்.
இம்முகாமில் ,மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், பொன்மணி, காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.