மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பணியாற்றும் பெண்ணுக்கு முதலமைச்சர் விருது

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்று திறனாளிகள் நலன் காக்க பாடுபட்டு வருபவர் அமுதசாந்தி

Update: 2022-08-16 16:15 GMT

சுதந்திர திருநாளில் அவருக்கு  விருது வழங்கி பாராட்டிய  தமிழக முதல்வர் ஸ்டாலின்

மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையாற்றும் பெண்ணுக்கு விருது வழங்கப்பட்டது

மதுரை எஸ். எஸ். காலனியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்று திறனாளிகள் நலன் காக்க பாடுபட்டு வருபவர் அமுதசாந்தி. இவர், மாற்றுத் திறனாளிகளின்,சுயநம்பிக்கை உடன் செயல்பட பயிற்சி அளித்து வருகிறார். மேலும், அவர் வேலை திறன் அவரவர முடிந்ததை செய்ய கற்று தருகிறார்.மேலும்,கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் மட்டுமில்லாமல், வழிகாட்டல் உள்ளிட்ட அம்சங்களில் செயல்படும் தியாகம் மகளிர் மேம்பாடு மையம் இயக்குனர் அமுதசாந்தி.தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.சுதந்திர திருநாளில் அவருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், விருது வழங்கி பாராட்டியுள்ளார்.

Tags:    

Similar News