இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவர்கள் கைது

Cannabis smugglers arrested on two-wheeler

Update: 2022-06-22 08:30 GMT

 மதுரையில் போலீஸாரால்  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவரைபோலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து  8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில், உள்ள சோதனைச்சாவடியில் போதை தடுப்பு காவல் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நெல்லூரை சேர்ந்த முத்துபாண்டி, ஆத்தூர் தாலுகா சித்தரேவை சேர்ந்த ரோஷன் ( 20), என்பதும் இருசக்கரவாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியதும் தெரிய வந்தது.மேலும், இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்கள் கடத்திவந்த 8 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, வழக்கு பதிவுசெய்து, வாடிப்பட்டி போலீசார் மேலும், விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News