காலை உணவுத் திட்டம்: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.;
மதுரை நாராயணபுரத்தில், உள்ள மாநகராட்சி பள்ளியில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்தார்த் சிங் ஆகியோர் காலை உணவு திட்டத்தை, ஆய்வு செய்தனர் .
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின், அண்மையில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் அமைச்சர்கள் இத்திட்டத்தை ஆய்வு செய்தனர். இத்திட்டமானது பள்ளிகளில், முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், மாணவர்களிடம் அமைச்சர் உதயநிதி இதுகுறித்து கேட்டறிந்தார். முன்னதாக, மாணவருடன் அமர்ந்து உணவை ருசித்துப் பார்த்தார்.