மதுரைக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் -க்கு அதிமுகவினர் வரவேற்பு
தாரை தப்பட்டை முழங்க யானை வரவேற்பளிக்க வந்த தொண்டர்களுடன் ஒ.பி.எஸ் உற்சாகத்துடன் படம் எடுத்துக்கொண்டார்;
மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற பின்னர் மதுரை வந்த ஓபிஎஸ் -க்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஓபிஎஸ், உடன் வந்த வாகனங்கள் அணிவகுப்பால், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவகுத்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றன.இதனால், விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதேபோல், விமான நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியிலும் அதிமுக தொண்டர்கள் நின்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
தாரை தப்பட்டை முழங்க யானை வரவேற்பளிக்க வந்த தொண்டர்களுடன் ஒ.பி.எஸ் உற்சாகத்துடன் படம் எடுத்துக்கொண்டார். இதனால், திரண்ட அதிமுக தொண்டர்களால் போக்குவரத்தை சரிசெய்ய போலீஸார் திணறினர்.மேலும், அதிமுக வாகனங்களுக்கிடையில் போலீஸாரின் வாகனமும் சிக்கியது.அதிமுக தொண்டர்கள் வரவேற்பால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இனி வரும் காலங்களில்,அரசியல் கட்சியினர் வரவேற்பு அளித்தால், விமான நிலையம் வெளிய பெருங்குடி பகுதிகளில் வரவேற்பு அளித்தால் பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் சிரமமின்றி செல்ல முடியும் என அனைத்துத்தரப்பினரும் தெரிவித்தனர்.