அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்..!

அமெரிக்காவிலிருந்து,ஆலை கொண்டு வர முயற்சிக்கும் முதலமைச்சர்: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க முயற்சிக்கவில்லை என ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு.

Update: 2024-10-01 11:20 GMT

வாடிப்பட்டி :

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிபட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு. க. சார்பாக,கழக வளர்ச்சிப்பணி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டமானது வாடிப்பட்டி நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றிய கழகச் செயளாலர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் மகேந்திரன்,தமிழரசன்,நீதிபதி, மாணிக்கம், கருப்பையா,எஸ் எஸ் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஸ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் எம்.கே.மணிமாறன்,தீர்மான அறிக்கை வாசித்தார். இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.வி. ராஜலட்சுமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பேசினர்.

இதில், ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

ஜனநாயகத்தை காப்பாற்றும் இயக்கமாக அதிமுக உள்ளது, இன்றைக்கு எடப்பாடியார் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களில் கழக நிர்வாகிகளிடம் கருத்து பரிமாற்றத்தை கேட்டறிந்து, வலிமையான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.  உழைப்பவர்கள் யாராக இருந்தாலும், சிவப்புக்கம்பளம் விரித்து எடப்பாடியார் வரவேற்பார். முதலமைச்சர் அமெரிக்கா சென்று ஆலையை கொண்டு வர முயற்சிக்கிறார்.

ஆனால், இங்கிருக்கும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க முயற்சி செய்யவில்லை. அதிமுகவிற்கு அதை பற்றி பேச உரிமை உண்டு. ஏனென்றால், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை சீரமைக்க 24 கோடி வரை நாங்கள் வழங்கினோம். கார் ரேஸ் நடத்த பணம் உள்ளது. ஆனால், மக்களுக்காக திட்டங்களை துவக்க பணமில்லை.பொது வாழ்வில் உழைத்தால் யார் வேண்டும் என்றால், பதவிக்கு வரலாம். ஆனால், திமுகவில் அப்படி இல்லை வாரிசு அரசியல், குடும்ப அரசியல் இதனால் இன்றைக்கு ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்துவிட்டது .

நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர், நேற்று அமைச்சர், இன்று துணை முதலமைச்சர், நாளை முதல் அமைச்சர் என்று திரைப்பட பாணியில் செய்துள்ளனர். அதேபோல், எனக்கு துணையாக மட்டுமல்ல மக்களுக்கே உதயநிதி துணையாக இருப்பார் என்று முதலமைச்சர் புது விளக்கத்தை அளிக்கிறார். இன்றைக்கு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வைக்கும் வகையில், திமுக செயல்பாடு உள்ளது. இன்றைக்கு பொன்முடிக்கு உயர் கல்வித் துறையில் இருந்து மாற்றம் செய்து வனத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் ரகசியம் என்ன?

ஏற்கனவே கவர்னர் மீது பொன்முடி அவமரியாதையாக, இழிவாக பேசினார். இதனால், தனது மகன் பதவியேற்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்று கவர்னர் மனதை குளிர வைக்க துறையை மாற்றி உள்ளார். அதேபோல், மனோ தங்கராஜ் அமைச்சர் பதவியை எடுத்துள்ளனர். இதே திமுக பாஜக அடிமை என்று எங்களை கூறினர், ஆனால் மோடியைபற்றி சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பரிமாறியதில் அவர் மீது கோபத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனது மகன் துணை முதலமைச்சராக ஆசி பெற பிரதமரை சந்திக்க சென்றபோது, ஆண்டான் அடிமை போல் மத்திய அரசுக்கு அடிபணிந்து அவரை பதவியில் இருந்து எடுத்து விட்டனர். இன்றைக்கு பத்தாவது இடத்தில் இருந்த உதயநிதியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர், நாளைக்கு முதல் இடத்திற்கு கொண்டு சென்று ஜனநாயகத்தை படுகொலை செய்வார்கள், மக்கள் இதை எளிதாக கடந்து போகக்கூடாது.

ஆகவே, தற்போது ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரே வழி மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தில் முதலமைச்சர் வரவேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில்  சந்திராபோஸ்,திவ்யா,அழகுமலைக்கண்ணன், செந்தில், மூர்த்தி, குழந்தைவேலன், பிச்சை, உமையாண்டி, தங்கய்யா, சசி, ரமேஷ்,அழகுராஜா,சங்கர்குமார்,ஜெயராமன், மிட்டாய் கார்த்தி, பெரியசாமி, தர்மர், முருகன், பிரசன்னா, அழகர், மாலிக், சசி, சுப்புராஜ், ஜெயச்சந்திரன், வசந்தகுமார்,நாகமணி, மலைச்சாமி,  வி.எஸ்.பாண்டியன்,பிரசன்னா, பாண்டி, அழகர், ஜெயக்குமார், மலைச்சாமி, தக்காளி முருகன், தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News