மதுரை மாநகர் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகர் பகுதியில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் டெங்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது;

Update: 2021-10-18 11:00 GMT

குப்பைக்கிடங்காக மாறும் மதுரை மாநகராட்சி

குப்பைகளை அல்ல மறந்த மாநகராட்சி மழை நீர் சேர்ந்து டெங்கு பரவும் அபாயம்... விரைந்து நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநராட்சி

 மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அல்ல படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் சாலையில் சிதறிக் கிடக்கும் நிலை தொடர்கிறது.  அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் இருப்பதால் அதில் மழை நீர் சேர்ந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பல்வேறு பகுதி மக்கள்  வேதனை தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி தூங்குகிறதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். பல நாட்களாக குப்பைகள் அள்ளப் படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் முகம்சுளித்தபடி கடந்து செல்ல  வேண்டிய நிலை உள்ளதாக  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மதுரை மாநகராட்சி ஆணையாளர் இதில் தனி கவனம் செலுத்தி குப்பைகள் முறைப்படி அள்ளப்புல்ல படுகிறதா என கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

Similar News