திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்

மதுரையில், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் , ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-06-10 11:34 GMT

மதுரையில், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம்.

மதுரையில், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் விவேகானந்த கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். அக தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்று பேசினார்.

இதைத்தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லூரி பேராசிரியர் முனைவர் பாலகுமார் பங்கேற்று, திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இதையடுத்து, கல்லூரியின் முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி வாழ்த்துரை வழங்கினார். முடிவில், வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் வடிவேல் நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்வை வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News