மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் : அரசு பள்ளி முதலிடம்..!
மாநில அளவிலான கலை போட்டிகளில் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேவராட்டத்தில் முதலிடம் பிடித்தனர்.;
மதுரை மாவட்டம் ,வாடிப்பட்டி அருகே கலைத் திருவிழா.
கலைத் திருவிழா போட்டி தேவராட்டத்தில் மேட்டுப்பட்டி அரசு பள்ளி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.
வாடிப்பட்டி :
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில், நடத்திய கலைத்திருவிழா போட்டிகளில் குழு நடனம் தேவராட்ட போட்டியில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ,விழாவில் பரிசு பெற்ற மாணவர்கள் தேவராட்டம் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். வெற்றி பெற்ற மாணவர் களை மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, மேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் முத்து லெட்சுமி ஆகியோரும் பள்ளி மேலாண்மைக்
குழுத்தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர் ஆசிரியர் கழகைத்தலைவர் பரமசிவம், தெ.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, தலைமையாசிரியர் சந்திரன், உதவித் தலைமையாசிரியை தீபா, மற்றும் ஆசிரியர்கள் அலுவல கப்பணியாளர்கள் வாழ்த்தி பாராட்டினர்.