மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி பிரதோஷ விழா

மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி பிரதோஷ விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-07-20 11:03 GMT

சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, ஆனையூரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத,ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று ஆடி வெள்ளி மற்றும் ஆடி மாதத்தின் முதல் வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு மீனாட்சியம்மனுக்கு கூழ் காய்ச்சி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.,

தொடர்ந்து, ஐராவதீசுவரருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த சிறப்பு பூஜையில், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் கோயில்களில், பிரதோஷ விழா கொண் டாடப்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர சுவாமி ஆலயத்திலும், பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர் சனீஸ் லிங்கம் நந்தி பகவான் சிவனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதை அடுத்து, சுவாமி, ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இந்த விழாவில், கோவில் தக்கார் இளமதி, தொழிலதிபர் எம். வி.எம். மணி, பள்ளித் தாளாளர் எம். மருது பாண்டியன், கவுன்சிலர் வள்ளிமயில், கோவில் கணக்கர் சி .பூபதி, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்திலும், தென்கரை மூலநாதர்சுவாமி ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், வரஷத்தி விநாயகர் ஆலயத்திலும், சித்தி விநாயகர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், பிரதோஷ பூஜை ஆனது சிறப்பாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News