பாலமேடு முத்தாலம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம்..!

பாலமேட்டில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா - பால்குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-06-21 11:31 GMT

பாலமேடு முத்தாலம்மன் கோவில் விழா, பால்குடம் எடுத்த பக்தர்கள்.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாம் நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கம் செய்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மன் திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும். அதேபோலவே இந்த ஆண்டும் எந்த குறையும் இல்லாமல் திருவிழா முடிந்துளளது என்று விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.  கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஊர் மக்களும் சில நிறுவனங்களும் அன்னதானம் போன்ற சிறப்பு காரியங்களுக்கு நிதி அளித்திருந்தனர். அவர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றனர்.  

Tags:    

Similar News