சோழவந்தானில் வெற்றி பெற்ற நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை

வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி நிர்வாகிகளுக்கு எம்எவ்ஏ வெங்கடேசன்ஆலோசனைகள் வழங்கினார்

Update: 2022-03-10 08:30 GMT

 வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்

சோழவந்தானில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி மற்றும் நிர்வாகிகளுடன்  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனைகள் வழங்கினார். பேரூராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், வெற்றி வாய்ப்பை இழந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயல்பட அறிவுரை வழங்கினார்.இதில் பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவர் ,வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News