நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

Update: 2024-07-16 09:47 GMT

அலங்காநல்லூரில்  நடந்த நாம்  தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலிமுருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, தொகுதி பொருளாளர் சதீஷ், ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அய்யூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பின்னர் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

பாலமேட்டில் நாம் நாம் தமிழர் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புதிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் மூக்குச்சாமி, ஒன்றிய தலைவர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் கண்ணதாசன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், அய்யூர் நிர்வாகிகள் ஆறுமுகம், கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக வாக்குகளைப்  பெற்று கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News