சோழவந்தானில் அதிமுக சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிவுறுத்தலின்படி பல இடங்களில் குருபூஜை நடைபெற்றது.

Update: 2021-10-28 05:45 GMT

மருதுபாண்டியர் குருபூஜை விழா.

மருதுபாண்டியர் குருபூஜை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிவுறுத்தலின்படி சோழவந்தான் பேரூர் வாடிப்பட்டி, பேரூர் சோழவந்தான் நகர அதிமுக வாடிப்பட்டி, தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ்கண்ணா,  சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் ராஜேஷ்கண்ணா, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய மற்றும் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் குருவித்துறை அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ் தென்கரை ராமலிங்கம் தண்டபாணி அசோக், தியாகு கேபிள் மணி, எஸ் எம்டி நாகராஜ், எஸ் பி கென்னடி, மருது, சேது, ராமச்சந்திரன், சிவகுமார், கருப்பட்டி, தங்கப்பாண்டி, ஆசிரியர் மணி, மகளிரணி சாந்தி மற்றும் வைகை ஆட்டோ அன்பர்கள் சபரிமலை மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News