மதுரை அருகே பலத்த மழை: பாலமேடு மஞ்சமலை ஆற்றில் வெள்ளம்
மதுரை அருகே பலத்த மழை பெய்ததால், பாலமேடு மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.;
மதுரை அருகே பாலமேட்டில், மஞ்சமலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மதுரை மாவட்டம் பாலமேடு, சோழவந்தான் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில், இன்று அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலமேடு மஞ்சமலை ஆற்றில், 10 ஆண்டுகளுக்கு பின் வெள்ளபெருககு ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள சாத்தியார் அணை நிரம்பி, 60 கனஅடி நீர்வரத்து உள்ளதால், அதிகளவு உபரி நீர் வெறியேறி, பாசன கண்மாய்ளுக்கு செல்வதால், இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம், கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.