வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 78903 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது;

Update: 2021-09-21 14:48 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஏலத்துக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய்

மதுரை மாவட்ட  விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 21 விவசாயிகளின் 78903 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 21 விவசாயிகளின் 78903 தேங்காய்கள்   35   குவியலாக மதுரை விற்பனைக்குழுவின் கண்காணிப்பாளர் திருமுருகன், தலைமையில் ஏலம் விடப்பட்டது.  இந்த ஏலத்தில்,14 வியாபாரிகள் பங்கேற்றனர்.

ஏலத்தில், அதிகபட்சமாக, விலையாக ரூ 14.05 க்கும் குறைந்த பட்சமாக ரூ 6.46 க்கும் சராசரியாக ரூ 9.58 க்கும்  தேங்காய் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 7.39 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.மேலும், 7 விவசாயின் 434 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில், 4 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 96.21 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 38020- க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News