சோழவந்தானில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் விழா:
பிரளயநாத சிவன் ஆலயத்தில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன;
சோழவந்தானில், கலஞர் தல மரக்கன்றுகள் திட்டத்தின் கீழ், ஜெனகை மாரியம்மன் உப கோயிலான, பிரளயநாத சிவன் ஆலயத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் சோழவந்தான் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் சார்பில், உபகோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோயில் செயல் இளமதி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், கோயில் கணக்கர் சி.பூபதி, எழுத்தர் கவிதா, எழுத்தர் வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.