மதுரை அருகே தான் படித்த பள்ளிக்கு செல்வதாகக் கூறிச்சென்ற மாணவி மாயம்

அலங்காநல்லூர் அருகே படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறி சென்ற மாணவியை காணவில்லையென புகார் அளிக்கப்பட்டுள்ளது

Update: 2021-09-14 12:05 GMT

பைல் படம்

மதுரை அருகே வீட்டை விட்டு படித்த பள்ளிக்கு சென்ற மாணவி காணாமல் போனது தொடர்பான புகாரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட  அலங்காநல்லூர் அருகே  பாலமேடு அருகே வெ. பெரியகுளத்தை சேர்ந்த மாணவி  தான்  பிளஸ்-௨ படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் தந்தை மலைச்சாமி அளித்த புகாரின் பேரில், பாலமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News