மதுரை; பாலமேடு சுடலை மாடசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

பாலமேடு அருகே ஶ்ரீ சுடலைமாடசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-06-12 09:42 GMT

பாலமேடு சுடலை மாடசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், முதல்கால யாகவேள்வி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நான்கு கால யாக பூஜையுடன் மகா பூர்ணாகுதி, தீபாராதனை, நடைபெற்றதை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரம் கும்பாபிஷேகம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சுடலை மாடசாமி திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

Similar News