பாலமேடு பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

மக்கள் இயக்க விழிப்புணர்வில் மஞ்சள் துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்படது

Update: 2022-06-06 09:00 GMT

பாலமேடு பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு பேரணியில் துண்டறிக்கை விநியோகித்த பணியாளர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள  பாலமேடு பேரூராட்சியில்தலைவர் சுமதி தலைமையில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பா. தேவி, துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலையில், தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வில் மஞ்சள் துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்படது. இதில், கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News