மதுரை அருகே யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், யுபிஎஸ் பயிற்சி மையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் டி.பி. அகர்வால், மாவட்ட ஆட்சியாளர் அனிஷ் சேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வெங்கடேசன் எம்எல்ஏ, இணை ஆணையர் சந்திரசேகர், ஹெச். சி.எல்.மேனேஜர் திருமுருகன், ரெடி அகதாமி சேர்மன் பூமிநாதன், மேனேஜிங் டைரக்டர் கே.ஜி. பாண்டியன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சிவக்குமார் ,சாந்தி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.